படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் யாழ் மாணவர் பேரவையின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இன்று(1) மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மலரஞ்சலி
இதன்போது, நிலக்சனின் திருவுருவ படத்திற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
யாழ். ஊடக அமையம்
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில், நடைபெற்றது.
அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.

யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டிற்கு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri