திறைசேரி மோசடி விடயம் ஆபத்து! பொலிஸார் அத்துமீறினால் உடன் நடவடிக்கை
திறைசேரியில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி இடம்பெற்றமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு முன்கூட்டியே தெரியும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்கட்சிகளும், சட்டத்தரணிகள் அமைப்புக்களும் முன்வைத்த விமர்சனங்களில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்த விடயம் முற்கூட்டியே தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தனர்.
அதேநேரம் திறைசேரியில் செயலாளர் ஜே.வி.பியின் முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர், அவர் நேர்மையானவர் என்ற அடிப்படையிலே இந்தப் பதவிக்கு தாங்கள் நியமித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை களம் நிகழ்ச்சியில் காணலாம்.