2024 இல் 18 வீதத்தால் அதிகரிப்பு கண்ட எயிட்ஸ் நோயாளிகள்
2024 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகள் பட்டியலில் 800 க்கும் மேற்பட்டோர் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட தகவல்படி, இலங்கையில் 824 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது, 2023 ஆம் ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாகும்.
எச்.ஐ.வி தொற்று
2023 இல் 694 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் பதிவான நோயாளிகளில், 99 ஆண்களும், 13 பெண்களும் 15-24 வயதுக்குட்பட்டவர்களாவர் மீதமுள்ள நோயாளிகள், b25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 47 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதேநேரத்தில் இலங்கை 2024 ஆம் ஆண்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகளை நடத்தியுள்ளது.
இதற்கிடையில், திருநங்கை சமூகத்தினரிடையே 18 எச்.ஐ.வி தொற்றுக்களை இலங்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
காரணம்
அதே நேரத்தில் 2009 முதல் இதுவரை மொத்தம் 4,909 ஆண்களும் 1,521 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுகள் அதிகரிப்பதற்கு, சோதனை திறன் விரிவாக்கம் இன்மை, பாலியல் கல்வி மற்றும் ஆபத்தான பாலியல் நடத்தை குறித்த மக்களிடையே உள்ள மோசமான அறிவு மற்றும் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஆகியவையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
