மாத்தளையில் கொடூரமாக தாக்கப்பட்டு மாணவன் ஒருவர் படுகொலை
மாத்தளை - மடவலவுல்பத்த பகுதியில் 17 வயது மாணவன் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடவளை - நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மேற்படி மாணவன், நண்பர்கள் இருவருடன் மடவலவுல்பத்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
நண்பர் ஒருவரின் காதலியைச் சந்திப்பதற்காக குறித்த மாணவன் சென்றுள்ள நிலையில், காதலியின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri
