கடற்கரையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவி: விசாரணையில் சிக்கிய காதலன்
பிரபல பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய மாணவி ஒருவரும் அவரது 30 வயதுடைய காதலனும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு இன்று (04) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாத்துவ,பொஹத்தரமுல்ல கடற்கரையில் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது மாணவியிடம் நடத்திய விசாரணையில், ஹொரணையில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது காதலன் மது அருந்த வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களா என உறுதிப்படுத்த சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
