சிறுமியான காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சிறுமி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விவகாரம்
காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமியும், கொலை செய்த சந்தேக நபரும் சிறிது காலமாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
குற்றத்தைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மில்லகஹமுல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்ய கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.