வவுனியாவில் ஏற்பட்ட விபத்து! 16 வயது சிறுவன் பலி
வவுனியா - உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று (17) மாலை உளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதி, வீதியால் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சிரசுமன ம. வி. நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
