வவுனியாவில் ஏற்பட்ட விபத்து! 16 வயது சிறுவன் பலி
வவுனியா - உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று (17) மாலை உளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதி, வீதியால் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சிரசுமன ம. வி. நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam