வவுனியாவில் ஏற்பட்ட விபத்து! 16 வயது சிறுவன் பலி
வவுனியா - உளுக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று (17) மாலை உளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருடன் மோதி, வீதியால் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சிரசுமன ம. வி. நவோதயா பாடசாலையில் கல்விகற்கும் ஹன்சா டில்சான் மிகிரிங்க என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
