வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வவுனியாவில் நேற்றைய தினம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்குக் கடந்த சில தினத்திற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
