வவுனியா கோவிட் சிகிச்சை மையத்தில் 155 நோயாளர்கள் அனுமதி
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிகிச்சை நிலையத்தில் கோவிட் நோயாளர்கள் நேற்று இரவு 11 மணி முதல் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கோவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் 31 நபர்களும், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 நபர்களும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 122 நபர்களும் என 155 (ஆண் நோயாளர்கள்) கோவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான மூன்று நேர உணவுகள் மற்றும் ஏனைய வசதிகளை வன்னி இராணுவத்தினர்
முன்னெடுத்துள்ளதுடன், அவர்களுடைய சுகாதாரம், மருத்துவம் போன்ற வசதிகளை
வவுனியா சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.












அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
