வவுனியாவில் டிப்பர் மோதி விபத்து - சிறுவன் மரணம்
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் இன்று (18.10) மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
மதவாச்சி - மன்னார் பிராதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயது சிறுவன் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
