யாழில் 15 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! விசாரணையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப்பொருள் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
13 பேர் பலி
இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் ஹெரோய்ன் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 15 வயது மாணவன் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்தவாரம் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட போதும் நேற்று அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
ஹெரோய்ன் பாவனை
மாணவனின் சடலத்தை நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
ஹெரோய்னை ஊசிமூலம் இந்த மாணவன் பயன்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
