அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள மறுத்த குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களுக்கு தொற்று உறுதி
வவுனியா - சாந்தசோலையில் இன்று( 03 ) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த இரு குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா சாந்தசோலை கிராமத்தில் வீடுகளில் வசிப்பவர்களுக்குப் பரவலாகக் காய்ச்சல் பீடித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நொச்சி மோட்டை கிராம அலுவலகர் ஊடாக சாந்தசோலை மாதர் அபிவிருத்திச்சங்கம், சனசமூக நிலையம் என்பன இணைத்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நடவடிக்கையில் இன்று சாந்தசோலை கிராம பொதுநோக்கு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த இரு குடும்பங்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தலையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரு குடும்பங்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை 65 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைக்கும்போது தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
சாந்தசோலையில் ஏற்கனவே பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்ட நான்கு பேர் உட்பட 25 பேருக்கு மேற்பட்டவர்கள் தொற்று அடையாளப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இப்பரிசோதனையில் கலந்து கொள்ளாதவர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு மாதர் அபிவிருத்திச் சங்கத்தினால் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan