பாதாள உலகினில் 1400 பேர் அடையாளம்! தீவிரமாகும் புலனாய்வு விசாரணை
நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் காணப்படுவதாகவும், அவர்களைப் பின்பற்றுபவர்களில் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து நடைபெற்று வரும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தற்போது இதனை கூறியுள்ளார்.
மேலும், நிகழ்வில் கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு
நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பின்பற்றுபவர்களில் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தலைவர்கள் (காட்பாதர்கள்) வெளிநாடுகளுக்குச் சென்று இந்தக் குற்றங்களைச் செய்து வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 93 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், குறிப்பிடப்படாத கூர்மையான ஆயுதங்களால் 18 தாக்குதல்களும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
22 சம்பவங்கள்
மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும, இதில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், கூர்மையான ஆயுதங்களால் 05 தாக்குதல்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த 17 சம்பவங்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, வன்முறை அதிகமாக உள்ள மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் குற்றங்களுக்கு பொலிஸார், ஆயுதப்படைகள் அல்லது பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்துள்ளதாகவும், அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
