லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 14 ஆண்டுகள்-இலங்கையில் கிடைக்காத நீதி (video)

Tamil Media Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Steephen Jan 08, 2023 06:17 AM GMT
Report

சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கனத்தை மயானத்தில் நினைவு தினம் அனுஷ்டிப்பு

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 14 ஆண்டுகள்-இலங்கையில் கிடைக்காத நீதி (video) | 14 Years Since Lasantha Wickramatunga Was Murdered

அவரது நினைவு தினமான இன்று கொழும்பு பொரள்ளை கனத்தை மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு அருகில் இன்று காலை எளிமையான நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இலங்கையில் புலனாய்வு செய்திகளை வெளியிடும் முக்கியமான பத்திரிகையான சன்டே லீடர் பத்திரிகை ஆதாரங்களுடன் வெளியிட்ட செய்திகள் அரசியல் துறையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.


பத்திரிகை மூலம் லசந்த விக்ரமதுங்க விமர்சித்த அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கு அவர் உள்ளனார்.

2009 ஜனவரி 8 ஆம் திகதி நடந்த கொலை 

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 14 ஆண்டுகள்-இலங்கையில் கிடைக்காத நீதி (video) | 14 Years Since Lasantha Wickramatunga Was Murdered

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆமு் திகதி தனது வீட்டில் இருந்து பத்திரிகை அலுவலகத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த கறுப்பு ஆடையை அணிந்து வந்த இரண்டு நபர்கள், லசந்த விக்ரமதுங்கவை கொடூரமான தாக்கி, துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அவரது கொலை சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலையுடன் தொடர்பு நபர்கள் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகின.

அவர் கொல்லப்பட்டு குறுகிய காலத்தில் அவரது கொலையுடன் கொழும்பு திரிபோலி இராணுவ முகாமுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 14 ஆண்டுகள்-இலங்கையில் கிடைக்காத நீதி (video) | 14 Years Since Lasantha Wickramatunga Was Murdered

அத்துடன் கொலையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து விசாரணைகளில் தெரியவந்தது. கொலை தொடர்பான விசாரணைகள் மிகவும் மந்தகதியில் நடந்தன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முதலாவது பதவி காலம் உட்பட நான்கு அரசாங்கங்கள் இதுவரை பதவி வந்துள்ளன. எனினும் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

[லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 14 ஆண்டுகள்-இலங்கையில் கிடைக்காத நீதி (video) | 14 Years Since Lasantha Wickramatunga Was Murdered]

எப்படியான அழுத்தங்களுடன் கூடிய செய்தியளிப்பில் ஈடுபட்டிருந்தாலும் லசந்த விக்ரமதுங்கவிற்காக அனைத்து ஊடகங்கள், அரசியல்வாதிகள் குரல் கொடுத்தாலும் விசாரணைகள் நீதியை நிலை நாட்டும் முடிவை நோக்கி நகரவில்லை.

இது இலங்கையின் சட்டத்துறை மற்றும் நீதியின்  சுபாவத்தை உலகத்திற்கு காட்டிய சந்தர்ப்பமாக மாறியுள்ளது.

இதேபோல தர்மரத்தினம் சிவராம், மயில்வாகனம் நிமலராஜன், சுப்ரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், செல்வராஜா ரஜீவர்மன், பிரகீத் ஹெக்னேலிகொட உட்பட பல ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகள் எவருக்கும் நீதித்துறையின் ஊடாக தண்டனை வழங்கப்படவில்லை.

மேலும், உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமைய உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US