குடும்ப வன்முறை தீவிரம் - 14 வயது சிறுவன் சுட்டுக்கொலை
வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கஜனாயககம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீரக்கெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.