இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: 14 பாகிஸ்தானியர்கள் கைது
இலங்கைக்கு 600 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிவந்த பாகிஸ்தான் மீன்பிடி கப்பலுடன் 14 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த பாகிஸ்தான் கப்பலான அல் ரஸாவில் இருந்த அனைவரும் பலுசிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் 78 பொதிகளில் 86 கிலோ ஹெரோயின் அடைக்கப்பட்டிருந்ததுடன், போதைப்பொருளின் பெறுமதி இலங்கை நாணயத்தில் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கையிருப்பு
இந்த போதைப்பொருள் கையிருப்பு இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், இலங்கைக்குள் கொண்டு செல்லும் நோக்கில் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கைக்காக கண்காணிப்பு விமானங்களையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பஹிதாருக்கு அழைத்து செல்லபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri