இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
பொலிஸ் முறைப்பாடு
இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சப்னா கில் உள்ளிட்ட நான்கு பேருக்கு இன்று(20.02.2023) 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறி அண்மையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரித்வி ஷா, பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய சப்னா கில் என்ற பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்பி எடுக்க முயற்சி
சாந்தாகுரூஸ் நகரில் உள்ள பிரபல 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டலில் நண்பருடன் உணவு சாப்பிட சென்ற இடத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் சிலர் பிரித்வியுடன் செல்பி எடுக்க முயன்று உள்ளனர்.
முதலில், 2 பேருடன் செல்பி எடுக்க பிரித்வி ஒப்பு கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் வந்து மற்றொரு செல்பி எடுக்க கேட்டுள்ளனர். ஆனால், நண்பருடன் சாப்பிட வந்திருக்கிறேன் என கூறி முடியாது என்று மறுத்து விட்டார்.
இதன்பின் பிரித்வியின் நண்பர் மேலாளரை தொடர்பு கொண்டு புகார் அளித்து உள்ளார்.
இதில் நடந்த மோதலில் பிரித்வி ஷா தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
