13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி; மரணப் பொதியை நிராகரிப்போம்: செல்வராசா கஜேந்திரன்

13th amendment Sri Lanka
By Bavan Feb 06, 2023 06:51 AM GMT
Report

இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டு சதியே 13ஆவது திருத்தச்சட்டம். இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெப்பிரவரி 4ஆம் திகதி கரிநாள் ஒற்றையாட்சியையும் 13ஆவது திருத்தத்தை ஒழுப்போம் என்ற தொனிப் பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு நகரில் நேற்று முன்தினம் (04.02.2023) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர்களால் சுதந்திரம் வழங்கப்பட்ட நாள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆழுகின்ற இறைமை அதிகாரத்தை சிங்கள தேசத்திடம் தாரைவாத்து 1948ஆம் ஆண்டு இதே நாளில் ஆங்கிலலேயர் சிங்களப் பேரினவாதத்திடம் அடிமைப்படுத்திச் சென்று 75 ஆண்டுகளாக இந்த நாளை தமிழர்கள் இருண்ட கரிநாளாக தொடர்ச்சியாக கடைபிடித்துவருகின்றனர்.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி; மரணப் பொதியை நிராகரிப்போம்: செல்வராசா கஜேந்திரன் | 13Th Amendment Act

சமஷ்டி தீர்வு வேண்டும்

தமிழர்கள் சதந்திரமாக இந்த தீவில் வாழ வேண்டுமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் அங்கீகிக்கப்படவேண்டும், தமிழர்களுடைய தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்க வேண்டும், சுயநிர்ணய ஊரிமையுடனான சமஷ்டி தீர்வு வேண்டும், ஒரு புதிய சமஷ்டி அரசியலமைப்பு இலங்கைக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது 75 வருடங்களாக தமிழர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைக்கும் போது, இருந்த ஒரே ஒரு தமிழ் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி முதன்முதல் நடந்த தேர்தலிலே ஓற்றையாட்சி அரசியல் யாப்பை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் போட்டியிட்டு அதில் வெற்றிப் பெற்றனர். அன்றைய நாளிலிருந்து இலங்கையில் 1948 ,72, 78, ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தமிழர்கள் நிராகரித்து வந்துள்ளனர்.

பின்னர் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி தமது தேச அங்கீகாரத்துக்காக போராடியுள்ளனர். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரைக்கும் தமிழர்கள் தங்கள் தேசத்தின் இறைமையும் சுயநிர்ணய உரிமை என்ற அங்கீகாரத்துக்காக தியாகமும் நிறைந்த உயிர் கொடுக்கின்ற புனித போராட்டத்தை நடாத்திவந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினர் அந்த தலைமைத்துவத்தை தாம்பாளத்தில் வைத்துக் கொண்டு தமிழர்களின் தலைமைத்துவத்தை பெற்றுக் கொண்டனர்.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் வந்த சுதந்திர தினங்களிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அதன் பேச்சாளர் எம்.சுமந்திரனும் அதில் கலந்து கொண்டு தமிழர் தேசத்தில் புலிகள் அழிக்கப்பட்டதை சிங்களவர்களுடன் சேர்ந்து ஒரு வெற்றி விழாவாக கொண்டாடினார்கள் தமிழ் மக்களை கொன்ற ராஜபக்சக்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவித்தனர்.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி; மரணப் பொதியை நிராகரிப்போம்: செல்வராசா கஜேந்திரன் | 13Th Amendment Act

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு 

இன்று அதே தரப்பினர் மக்களால் இனங்காணப்பட்டு மக்கள் முன்னே வரமுடியாத நிலையில் கூட்டமைப்பு என்றதை தொலைத்துவிட்டு தனித்தனி அடையாளத்துடன் மக்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றனர்.

இலங்கை தீவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் இந்தியாவினுடைய நலன்கள் மற்றும் அமெரிக்கா ஜரோப்பிய நாடுகளின் பூலோக நலன்களை பேனுவதற்கு 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற பெயரிலே இந்தியாவும் இலங்கையும் கூட்டுசதி செய்து 13ஆவது திருத்த சட்டத்தை உருவாகினர். அதன் மூலம் மாகாணசபை கொண்டுவரப்பட்டது.

அதன் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியிடம் இருக்கின்றது அவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இருக்கின்றது மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ எந்த அதிகாரமும் இல்லை. மாகாணசபைக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதுடன், காணி பொலிஸ் அதிகாரம் கிடையாது என்று ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் என உச்சநீதிமன்றம் 30 தீர்ப்புக்களில் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாத்திற்கு ரணில், மைத்திரி நல்லாட்சி கலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரிலே ஓரு அரசியல் அமைப்பை வரைபை உருவாக்கினர்.

அந்த அரசியல் அமைப்பில் இரா.சம்மந்தன், பௌத்த மதம் முதன்மை மதம் என எழுத்து மூலமாக கையொப்பம் வைத்துள்ளார். இது தமிழர்களுக்கு செய்யப்பட்ட மிகப் பெரும் துரோகம். அதேபோல வடகிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும் சமஷ்டியை கைவிடுவதற்கு இனங்கியுள்ளதுடன், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எங்கள் மீது திணிக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டுவருவதற்கு இனங்கியுள்ளனர்.

அதை நாங்கள் இன்று நிராகரிக்கும் வகையில் இந்த பேரணியை செய்துள்ளோம் இந்த 13ஆவது திருத்த சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி தமிழரசு கட்நசி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விக்கினேஸ்வரன் அணியினர் நிற்கின்றனா.

ஏனையவர்கள் அரசாங்கத்துடன் நின்று கொண்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இன்று அவர்களும் சுதந்திர தின கரிநாள் என்ற பேர்வையில் நீலிமுதலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் சவக்குழி; மரணப் பொதியை நிராகரிப்போம்: செல்வராசா கஜேந்திரன் | 13Th Amendment Act

ஜனாதிபதி  அழைப்பு 

ஏன்என்றால் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து ஒற்றையாட்சிக்குள் 13ஈவதை ஏற்றுக் கொண்டு தயாராகிவிட்டனர். மக்கள் தங்களை இனங்கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ரணிலுக்கு எதிர் போல் நாடகமாடிக் கொண்டுள்ளனர். இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஒரு அழைப்பு விடுத்தார்.

நான் இனப்பிரச்சினையை ஓராண்டில் தீர்க்கப் போவதாகவும் தமிழ் தலைவர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டிருந்தார். இதன்போது ரணிலுக்கு பதிலளித்த எம்.சுமந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கு எடுக்கின்ற முயற்சியை வரவேற்பதாகவும் 2016ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் வரையப்பட்ட அரசியல் அமைப்பின் அடிப்படையில் தீர்வுகான முற்பட்டால் ஓராண்டு தேவையில்லை, 3 மாத்தில் தீர்வு வந்துவிடும் என்றார்.

இந்தியா தனது பிராந்திய நலன்களை பேணுவதற்காக தமிழர்களை 13ஐ ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்தித்து தமிழர்களை அழிக்கின்ற நடவடிக்கைக்கு தொடர்ந்தும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

தமிழர்களிடம் வாக்குகளை பெற்று கொண்டு பிரதிநிதிகள் என்று சொல்லுகின்றவர்கள் இந்தியாவிடம் சலுகைகளை பெற்றுக் கொண்டு 13ஆவதை நடைமுறைப்படுத்தல் என்ற பேர்வையிலே ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

இதனை மக்களும் புரிந்து கொள்ளவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு பலியாககூடாது. விழிப்படைய வேண்டும் என்பதுடன், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த வொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US