13 ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்குமென நினைப்பது முட்டாள்தனம்: விக்னேஸ்வரன்

13th amendment Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kajinthan Apr 03, 2023 04:29 PM GMT
Report

சில தமிழ் தரப்புக்கும் 13 ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைத்து விடும் என நினைப்பது முட்டாள்தனமான விடயம் என முன்னாள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற 13 ஆவது திருத்தத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

13 ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்குமென நினைப்பது முட்டாள்தனம்: விக்னேஸ்வரன் | 13Th Amanment And Srilnakna Tamils

இலங்கையை இரு அரசுகளாக பிரிக்க வேண்டும்

13 ஆவது திருத்தம் இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு விடயம்.

13 ஆவது திருத்தத்தை ஆராய்வதற்கு முன்னர் வரலாற்றின் பிற்பகுதியை நோக்கிச் சென்றால் 1925 ஆம் ஆண்டு எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது இலங்கையை மூன்று பிரிவுகளாக சமஷ்டி அடிப்படையில் பிரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.

அவர் அந்த கோரிக்கையை முன் வைக்கும் போது அவருக்கு வயது சுமார் 27 என நினைக்கிறேன். வயது பெரிய விடயம் அல்ல. அதேபோன்று 1944 களில் கம்யூனிச கட்சியினர் இலங்கையை இரு அரசுகளாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் சிங்களவர்களுக்கு ஒரு அரசும் தமிழர்களுக்கு ஒரு அரசும் நிறுவப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

13 ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்குமென நினைப்பது முட்டாள்தனம்: விக்னேஸ்வரன் | 13Th Amanment And Srilnakna Tamils

தமிழும் சிங்களமும் அரச கரும மொழி

ஜே. ஆர் தமிழும் சிங்களமும் அரச கரும மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை மக்கள் சபையில் முன் வைத்தார்.அப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜி.ஜி. பொன்னம்பலமும் இலங்கை தந்தை செல்வாவும் 50 க்கு 50 வேண்டும் என்று கேட்டார்கள் சமஸ்டியை கோரவில்லை.

13 ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்குமென நினைப்பது முட்டாள்தனம்: விக்னேஸ்வரன் | 13Th Amanment And Srilnakna Tamils

1947 ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது மொத்தமாக 95 ஆசனங்களில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு 7 ஆசனங்களும் மலையகத் தமிழரை பிரதிநிதுவப்படுத்தியவர்களுக்கு 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றது.

மலையக தமிழர் சார்ந்து முதன் முதலில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றமையை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.பிற்பட்ட நாட்களில் மலையக தமிழருக்கான பிரஜா உரிமை தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து தந்தை செல்வா பிரிந்து தமிழரசு கட்சியை உருவாக்கினார்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சிங்களவருக்கு பாதி தமிழருக்கு பாதி என்ற நிலைப்பாடு இருந்த நிலையில் சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் அந்த நிலைமை சற்று மாறியே சென்றது.

13 ஐ எதிர்த்தால் தனிநாடு கிடைக்குமென நினைப்பது முட்டாள்தனம்: விக்னேஸ்வரன் | 13Th Amanment And Srilnakna Tamils

தமிழ் கட்சிகள் ஓரணி

இவ்வாறு பிரச்சனைகள் பல எழத் தொடங்கிய காலத்தில் ஜே ஆர் தமிழ் மக்களை அடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றார்.

தற்போது 13 வேண்டும் வேண்டாம் என்ற பிரச்சனை தமிழர் தரப்பிலே எழத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ் தரப்புகள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று பதின்மூன்றைக் கோர வேண்டும்.

13ஐ எதிர்த்து விட்டால் தனிநாடு கிடைத்து விடுமென சிலர் முட்டாள்தனமாக சிந்திப்பது இருக்கும் சொற்ப அனுகூலங்களையும் இழந்து விடுவதாக அமைகிறது.

ஆகவே கருத்து முரண்பாடுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற சொற்ப அதிகாரமான 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று இந்தியாவைக் கோர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US