தமிழர் பகுதியில் மாயமான சிறுவன்.. பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, அவரின் பெற்றோர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பு கொள்ளுங்கள்..
பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என்கின்ற 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பொதுமக்களின் உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
சிறுவன் தொடர்பான தகவல் தெரிந்தால் 0771824506 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.

ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan