தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 13 வேட்பாளர்கள் கைது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு (Police media) தெரிவித்துள்ளது.
அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட மீறல்கள்
அத்துடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மார்ச் 3 முதல் இன்றுவரை மொத்தமாக 24 குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் அந்தக் காலகட்டத்தில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |