எரிபொருள் நிலையத்தில் அதிகரிக்கும் வன்முறை செயல்கள்
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை வௌ்ளவாய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்த சம்பவம் நேற்றிரவு(05) நடைபெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கற்கள் மற்றும் போத்தல்களினால் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது

குறித்த தாக்குதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பேரும் 18-45 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் எனவும் தாக்குதலில் ஈடுப்பட்ட 20 நபர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை

சந்தேக நபர்களுடன் மோட்டார் சைக்கிள்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri