எரிபொருள் நிலையத்தில் அதிகரிக்கும் வன்முறை செயல்கள்
எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை வௌ்ளவாய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்த சம்பவம் நேற்றிரவு(05) நடைபெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கற்கள் மற்றும் போத்தல்களினால் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது

குறித்த தாக்குதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பேரும் 18-45 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் எனவும் தாக்குதலில் ஈடுப்பட்ட 20 நபர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை

சந்தேக நபர்களுடன் மோட்டார் சைக்கிள்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam