மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1,235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கோவிட் - 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றிய காணொளி ஒளிபரப்பட்டது. பிரமுகர்களின் உரைகளைத்தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், அட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி பகுதிகளிலிருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் நுவரெலியா - இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ்வீட்டு திட்டத்திற்கான பெயர் பலகை இன்று (04) உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்குரிய லிடேஸ்டெல் வீடமைப்பு திட்டத் திறப்பு விழாவானது பிரதான நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைத் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய நிகழ்வினை சிறப்பித்த இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி பி.ராஜதுரை, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பிலிப், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ்,பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதிய அதிகாரிகள் மற்றும் யு.என்.எபிடாட் நிறுவன பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் இவ்வீடுகளை உத்தியோகப்பூர்வமாக மக்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.











துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
