நெடுந்தீவுக்கு அருகில் தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது!
யாழ்., நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்
தமிழகத்தின் புதுக்கோட்டை - ஜெகதாபட்டினத்தில் இருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு
நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படைத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.