கெஹெலிய உட்பட 12 பேருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை!
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளது.
அழைப்பாணை
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை கையளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 13 குற்றப்பத்திரிகைகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
