தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Tamils Jaffna Nallur Kandaswamy Kovil
By Rakesh Sep 25, 2025 07:43 PM GMT
Report

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் 11ஆம் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று(25) யாழ்ப்பாணம் - நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றுள்ளது.

வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பரிதாப மரணம்!

வாகன விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பரிதாப மரணம்!

நினைவேந்தல்

இதன்போது, தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.

என்பிபி அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ச

என்பிபி அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ச

யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

யாழ். மாநகர சபை

தமிழ் மக்களின் விடுதலைக்காக 12 நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஆகுதியான தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாநகர சபையின் சபை அமர்வு மேயர் வி.மதிவதனி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்பொது ஆரம்பத்திலேயே தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

மாநகர சபை மேயர் சுடரேற்றியதைத் தொடர்ந்து சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேநேரம் இந்த இந்த அஞ்சலி நிகழ்வில் ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகாது அஞ்சலி நிகழ்வு நிறைவுற்ற பின்னர் சபை அமர்வில் பிரசன்னமாகாது அஞ்சலி நிகழ்வு நிறைவுற்ற பின்னர் சபை அமர்வில் பங்கு கொண்டனர்.

அராலி 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன.

இறுதியாக நினைவேந்தலில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், உப தவிசாளர் க.இலங்கேஷ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், வலி. மேற்கு பிரதே சபையின் உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு

தியாகதீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் நடைபெற்றுவரும் நினைவு எழுச்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

தியாக தீபம் திலீபனின் 38வது ஞாபகார்த்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணி இன்றைய தினம் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி தொடக்கம் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு எழுச்சி வாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலக்கியா தென்றல் அமைப்பின் அனுசரணையுடன் அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.நிதர்சன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுப்போட்டியானது நாளை மாலை வரையில் நடைபெறவுள்ளதுடன் சுற்றுப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனிக் நினைவுத் திடலில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

ஐந்தம்ச கோரிக்கைய முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில், தாயக செயலணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனிக்கான அஞ்சலி நிகழ்வு நேற்றையதினம் (25) இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 38 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

தாயக செயலணியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அஞ்சலியினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டு, நாளை மன்னார் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் கிழக்கு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினத்தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் திலிபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்குமுகமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அஞ்சலி

அஞ்சலிச்சுடரினை இந் நாள் பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது. உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலிபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவடுவதற்கும் அவ் வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலிபன் வீதி என மீளவும் மாற்றியமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலிபன் அவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு திருவுருவச் சிலையினை 1975 ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ள10ராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷனால் அவைத் தீர்மானத்திற்காக முக்வைக்கப்பட்டது.

இத் தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 உண்ணாவிரதப் போராட்டம்

 தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனிக் நினைவுத் திடலில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் | 11Th Day Of The Commemoration Of Martyr Thileepan

ஐந்தம்ச கோரிக்கைய முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்து 38 ஆண்டுகள் கடந்த நிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் வடமராட்சி பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் மூன்றாவது நாளாக வடமராட்சி மக்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் கப்டன் கருணாநிதி அவர்களது சகோதரரும், சட்டத்தரணியும், பருத்தித்துறை நகரசபை உறுப்பினருமான தி.சந்திரசேகரன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர்மாலையை பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர் தேவசிகாமணி தெய்வேந்திரம் அணிவித்தனர்.

தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சிறிகண்ணன் சிறிபிரகாஸ் ஆகியோர் அணிவித்தனர்

தொடர்ந்து மலர் அஞ்சலியினை பருத்தித்துறை நகரபிதா வின்சன்டிபோல் டக்ளஸ் போல் ஆரம்பித்துவைக்க அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.

இதில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளரும் மருத்துவருமான சிவகுமார் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், மற்றும் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நாளை காலை 8:00 மணியிலிருந்து அடையாள உண்ணாவிரதமும் 10:48 மணியளவில் தியாகதீபம் திலீபன் அவர்களது இறுதிநாள் நினைவேந்தல் என்பன இடம்பெறவுள்ளதாக தியாகி திலீபன் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US