மட்டக்களப்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது
மட்டக்களப்பு நகர் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மோப்ப நாயுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திடீர் சுற்றிவளைப்பானது நேற்று (29.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் சோதனை நடவடிக்கை
மேலும், மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்
பண்டார தலைமையிலான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று பகல்
மத்தியஸ்தர் வீதியிலுள்ள பிரபல பெண் போதை பொருள் வியாபாரியின் வீட்டை
முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அண்ணாச் என அழைக்கப்படும் பெண் வியாபாரியை கைது செய்ததுடன் ஐஸ் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையின் போது இருவரை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அந்த பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நடமாடிய 8 பேர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
