மட்டக்களப்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது
மட்டக்களப்பு நகர் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மோப்ப நாயுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திடீர் சுற்றிவளைப்பானது நேற்று (29.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் சோதனை நடவடிக்கை
மேலும், மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்
பண்டார தலைமையிலான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று பகல்
மத்தியஸ்தர் வீதியிலுள்ள பிரபல பெண் போதை பொருள் வியாபாரியின் வீட்டை
முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அண்ணாச் என அழைக்கப்படும் பெண் வியாபாரியை கைது செய்ததுடன் ஐஸ் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையின் போது இருவரை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அந்த பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நடமாடிய 8 பேர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri
