சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் பிரதேசத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் நிகவெரட்டிய , வாரியபொல பிரதேசங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை
குறிப்பாக அவுலேகம, கரந்தவெட்டிய, தமிழ்வெல்லம உள்ளிட்ட பகுதிகளில் சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும்இ வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri