நாட்டில் சில பகுதிகளில் 30 மணிநேர நீர் விநியோகத் தடை
காலியின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. இதனை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் (21) பிற்பகல் 2.00 மணிவரையிலான காலப்பகுதியில் நீர்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீர் விநியோகத் தடை
இதற்கமைய போபே, போத்தல, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் அஹங்கம பகுதிக்கு குறைந்த அழுத்த நிலைமைகளின் கீழ் நீர் விநியோகம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்விநியோகத்தடை நடைமுறைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு? Manithan
