கொழும்பில் சிக்கிய பல வெளிநாட்டுப் பெண்கள்
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச்சென்ற சட்டவிரோத விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு பெண்ணிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய,கொள்ளுப்பிட்டி காலி வீதியில் உள்ள குறித்த இடத்தை சுற்றிவளைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் இருந்த மூன்று வியட்நாம் பெண்கள், ஆறு தாய்லாந்து பெண்கள் மற்றும் ஒரு சீனப் பெண் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri