முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரும் பிணையில் விடுதலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் எனக் கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைது செய்யப்பட்ட 10பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் உட்பட 10 பேர் அன்றையதினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அதனைப் படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்து வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை
மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri