சில பகுதிகளுக்கான 10 மணிநேர நீர் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (23) நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடை
காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனால் பாவனையாளர்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
