இலங்கை முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம்! அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை
பாதுகாப்பு பணியில் சிவில் உத்தியோகத்தர்கள்
புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் பண்டிகையைக் கொண்டாடத் தேவையான சூழலை உருவாக்குவதே இலங்கை பொலிஸாரின் பிரதான நோக்கமாகும்.

இதற்காக நாடுபூராகவும் உள்ள 608 பொலிஸ் நிலையங்கள் மற்றும் 48 பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் புலனாய்வுப் பிரிவினர், சீருடை மற்றும் சிவில் உடை தரித்த உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு போக்குவரத்து கடமைகளுக்காக 10 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளனர்.
சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மதுபோதையிலும், அதிவேகத்துடனும் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட காரணிகளால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் சம்பவிக்கின்றன.
ஆகையால் வாகன சாரதி தமது பொறுப்பை உணர்ந்தும், தனது அன்பார்ந்தவர்களை ஆபத்தில் தள்ளாது அவதானத்துடன் வாகனம் செலுத்துவது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு மோதலில் உச்சக்கட்ட பதற்றம் - ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ள வளைகுடா நாடுகளின் கடும் எச்சரிக்கை
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam