கனடாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் காயம்
கனடாவின் எட்டோபிகோக் (etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டோபிகோக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக ரொறொன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் பலியானவர் 50 வயதுடையவர் என்றும் அவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam