கனடாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் காயம்
கனடாவின் எட்டோபிகோக் (etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டோபிகோக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக ரொறொன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் பலியானவர் 50 வயதுடையவர் என்றும் அவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam