கனடாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் காயம்
கனடாவின் எட்டோபிகோக் (etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டோபிகோக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக ரொறொன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் பலியானவர் 50 வயதுடையவர் என்றும் அவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam