ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் பலர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த 09 சந்தேகநபர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு, காலி, ராகமை, மொரட்டுவை, பண்டாரகம மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 09 சந்தேகபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் புகுடு கண்ணா, பொடி லெஸ்ஸி, கணேமுல்ல சஞ்சீவ, ஹினடிய சங்க, குடு அஞ்சு, குடு சலிந்து மற்றும் மத்துகம கவரியா ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |