பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர்கள் தமிழகத்தில் கைது - செய்திகளின் தொகுப்பு (Video)
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர், இலங்கைத் தமிழர்களை மீட்டு, மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,