மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு (PHOTOS)
இந்தியா - கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் - பாலக்காட்டையை சேர்ந்த 28 வயதுடைய பாபு எனும் இளைஞரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு 3 நண்பர்களுடன், நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர்.
இதன்போது மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்துள்ளதுடன்,அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றுள்ளதுடன், இளைஞன் சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியாத நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது.
நீண்ட நேரத்திற்கு பின்னர் வாலிபர் சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டு உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 43 மணி நேரமாக போராடிய பாபுவை மலையேற்ற பயிற்சி பெற்ற இராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri