நாயாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தங்கபுரத்தினை சேர்ந்த இளைஞர் பலி
முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குத்தொடுவாயில் இருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து நாயாற்று பாலத்தில் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது குறித்த மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் பாலத்தில் மோதி படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் அளம்பில் - தங்கபுரத்தினை சேர்ந்த 26 வயதுடைய இராசன் மோகன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அதேபகுதியை சேர்ந்த 56 வயதுடைய கோபால் புஸ்பராசா என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri