யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அவலம்
யாழ்ப்பாணம்-வடமராட்சி, கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் இ்டம்பெற்ற படகு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழில் நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்று அதிகாலை கரவலை கடற்றொழில் நடவடிக்கை இடம் பெற்றது.
அண்மைய நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் அசாதாரண காலநிலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியிலும் கடும் காற்று நிலவியது.
மேலதிக விசாரணை
இதன் போது, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



