யாழில் சோகம் : மின் தூக்கியில் சிக்குண்டு இளைஞர் பலி
யாழில் தனியார் விருந்தினர் விடுதியில்(lift) மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.
தனியார் விடுதி ஒன்றின் பணியாளராக கடமையாற்றும் அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த இளைஞன் விருந்தினர் விடுதியின் மின் தூக்கியில் செல்லும்போது தலையை மின்தூக்கிக்கு வெளியே எடுத்ததால் தலை சுவருடன் மோதி குறித்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகிதிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
