புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! இளைஞன் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தி நிலையமொன்றினை முற்றுகையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.
இளைஞன் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸார் இந்த சோதனையில், 8 பரல்களில் 1280 லீற்றர் கோடா, கேன்களில் தயாரிக்கப்பட்ட 100 லீற்றர் கசிப்பு, மேலும் சுருள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேவிபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 03.03.2025 அன்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam