அம்பாறையில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
அம்பாறை- கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (7) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது,சந்தேக நபரிடம் இருந்து 740 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணை
அத்துடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினரால் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



