விபத்தில் பலியான இளம் பெண்
சிலாபம் - முந்தல் கோயில் சந்திப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வேம்பு மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 24 வயதான யுவதி மரணமடைந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
முந்தல் கோயில் சந்தி வில்பெத்த பகுதியை சேர்ந்த 24 வயதான குணரத்ன அபேசிங்க முதியன்சலாகே அஞ்சலி ருவன்திமா பியுமந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யுவதி தனது சகோதரன் மற்றும் தாயாருடன் நுவரெலியா பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதியின் வீட்டுக்கு மிக அருகில் கோயில் சந்தியில் இந்த விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டியை யுவதி சகோதரர் ஓட்டியுள்ளார்.
அவருக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேம்பு மரத்தில் மோதியுள்ளது.
விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யுவதியின் சகோதரரும் தாயும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த யுவதி வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாகவும் யுவதியும் சகோதரரும் தாயுடன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam