வெளிநாடு செல்வதற்கான பணத்தை திரட்ட மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி
கொழும்பை அண்மித்த ஹங்வெல்ல பிரதேசத்தில், வெளிநாடு செல்வதற்கான பணத்தை தேடிக்கொள்வதற்காக ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதியொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் ஐஸ் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த யுவதி இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளதாகவும், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான பணத்தைத் தேடிக் கொள்வதற்காக ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
டுபாயில் தலைமறைவாக வாழும் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர் மூலமாக வழங்கப்பட்ட ஐஸ் போதைப் பொருளையே குறித்த யுவதி விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
