லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இளம் பெண்! பொலிஸார் விடுத்துள்ள உடனடி கோரிக்கை
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் பூங்காவிற்கு அருகில் இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
லண்டனின் Cator பூங்காவில் உள்ள Onespace Community மையத்திற்கு அருகில், நேற்று மாலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் சில தகவல்கள் தெரிந்தாலும், இதுவரை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ள முடியுமெனவும்,அவை இரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri