விபத்தில் உயிரிழந்த இளம் விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கும்புக பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இளம் விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இளம் விஞ்ஞானி விமுக்தி பிரசாத் ஜயவீரவின் மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோனையின் போது அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
விபத்துக்குள்ளான காரின் ஓட்டுனர் இருக்கை பகுதியில் காணப்படும் காற்றுப் பையில் இருந்த இரும்புத் துண்டு அவரது தொண்டையில் குத்தி சிக்கியதாலேயே மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஹொரணை வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் பிரனீத் விஜேசுந்தர இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.