இளையோர்களே சிந்தியுங்கள்! இல்லையேல் தமிழ் தேசமும் பறிபோய் விடும்: சிவகரன்

Sri Lankan Tamils Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Ashik Jul 22, 2022 02:38 PM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாட்டால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தகுதியை கூட்டமைப்பு இழந்து விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும், “அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கால நிலவரத்தை நுட்பமாக புரிந்துகொண்டு தாம் தலைமை தாங்கும் மக்கள் கூட்டத்தின் இருப்பை மேலும் மேன்மைப்படுத்தும் வகையில் அந்த மக்களின் ஒத்துணர்ந்த மனநிலையையும், புரிந்துகொண்டு அறிவார்த்தமாக நின்று நிலைக்கக்கூடிய திடமான முடிவுகளை தகுந்த தருணத்தில் எடுப்பதே ஒரு அரசியல் கட்சியின் உண்மையான நோக்கு நிலையாகும்.

அரசியல்வாதிகளின் ஊழல்

ஆனால் கூட்டமைப்பு மிகவும் பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக தீர்மானம் எடுத்துள்ளது. ஆகவே இவர்கள் தொடர்ந்தும் தலைமை தாங்க தகுதியுடையவர்களா? 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் கூட்டமைப்பினர் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் தீர்மானங்களை யே எடுத்து வருகின்றனர்.

தற்போது தமிழரசு கட்சியின் தலைவரும் விமர்சித்திருப்து மிக வேடிக்கையானது. ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள இளைய சமுதாயம் தொடர்ந்து அமைதியாக இருப்பதிலும், பொழுது போக்கிற்கு முகநூலில் பொங்கி எழுவதிலும் எந்த பயனும் இல்லை. தீர்மானம் மிக்கவர்களாக மாறவேண்டும்.

இவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியை விரைவாக முன்னெடுக்காவிட்டால் தமிழினத்தின் தன்மானத்தையும், சுயாதீனத்தையும், எதிரிகளிடம் வசப்படுத்தி விடுவார்கள்.

ஆகவே நீங்கள் விரைவாக இனப்பற்றுடன் விழித்தெழுங்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாத சமூகம் அனாதை பிணத்திற்கு ஒப்பானது தமிழ் மக்கள் தொடர்ந்து அமைதி காப்பதால் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எடுக்கின்றனர்.

எனவே சம்பந்தன் வயோதிபம் காரணமாக வாழ்வின் அந்திம காலத்தில் உள்ளார். அவர் ஓய்வு பெறுவதே இந்த இனத்திற்கு செய்யக்கூடிய மிக சிறந்த நன்மையாகும். அதை பலரும் வலியுறுத்த வேண்டும்.

இளையோர்களே சிந்தியுங்கள்! இல்லையேல் தமிழ் தேசமும் பறிபோய் விடும்: சிவகரன் | Young People Think About The Tamil Nation

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிததலைவர்களுக்கு ஒரு போதும் வல்லமையோ, ஆளுமையோ செயல் திறனோ இருந்ததில்லை. தேர்தலில் வெல்வது மட்டுமே அவர்களது இலக்கு இவர்களால் எப்படி தலைமை தாங்கமுடியும்? என தமிழ்மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். வடிகட்டிய சிங்கள பௌத்த இனவாதிகளுடன் கூட்டு அதற்கு மாறாக ரணிலை ஐவர் ஆதரித்ததாக அறிகின்றோம்.

ஏன் இந்த இருட்டு வீட்டு குறுட்டு நாடகம் நிதானமாக முடிவெடுக்க முடியாததும், எடுத்த முடிவை பின்பற்றாமையும் என்பது ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் அரசியல்வாதிகளுக்கும் ஒழுக்கம் அல்ல ஆக மொத்தம் இவர்கள் அரசியல் வணிகர்களே. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்பாடு.

எனவே வாக்களித்த மக்களின் விருப்பையோ, கருத்தியலாளர்களின் ஆலோசனையோ கேட்காமல் பல இயக்கங்களை உருவாக்கி ஆயுதத்தையும், பணத்தையும் வழங்கி அவர்களுக்குள் சண்டையும் ஏற்படுத்தும்.

பலரை கொலை செய்யவைத்து அமைதிப்படை என வந்து அட்டூழியம் செய்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை பங்கேற்று தமிழ் தேசியத்திற்கு எப்போதும் விரோதியாகவே செயற்படும்.

இந்தியாவின் சகுனி வேலையை புரிந்து கொள்ளாமல் இனரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அவர்களில் தங்கியிருப்பது அரசியல் அயோக்கியத்தனத்தின் அதியுச்சம்.

விடுதலைக்கு போராடி இழக்க முடியாத இழப்புகளை எல்லாம் சந்தித்து ஏதிலியாக உள்ள தமிழினம் உங்களை மறந்தும் மன்னிக்காது ஆகவே வாக்களித்த மக்களுக்கு எதிர்காலத்திலாவது விசுவாசமாக இருங்கள்.

ஒரு அரசியல் கட்சி மக்கள் நலனில் பொறுப்பேற்று, பொறுப்புக்கூறி பகிர்ந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தலைவர்கள் சர்வாதிகாரிகளாகவே இருக்கிறார்கள்.

எப்படி ஜனநாயக கட்டமைப்பை பின்பற்ற போகிறார்கள்? பெயரளவில் ஜனநாயகக் கட்சி எல்லோரும் தலைவர் பிரபாகரனாக தீர்மானம் எடுக்கவும், செயற்படவும் ஆசை.

ஆனால் ஒரு பொழுதேனும் பிரபாகரனாக வாழ முடியவில்லை. அறமில்லாத அரசியல் செய்ததின் விளைவை இன்று ராஜபக்ச குடும்பம் அனுபவிப்பதை பார்த்து இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இளையோர்களே சிந்தியுங்கள்! இல்லையேல் தமிழ் தேசமும் பறிபோய் விடும்: சிவகரன் | Young People Think About The Tamil Nation

இளைஞர்களுக்கு கோரிக்கை

நாளை இவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். எனவே அறிவார்த்தமாக தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உணர்வு சார்ந்து முரண்படுவார்களாயின் ஒரு போதும் தலைவர்களாக முடியாது.

சட்ட அறிவுள்ள சுமந்திரன் ஒரு தலைவராக நிதானமாக செயற்படாமல் மக்கள் மன்றை கையாள்வது, வழக்காடு மன்றில் ஒரு தரப்பு சட்டத்தரணி போல் வழக்காடுவது அல்ல என்பதை சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தலைமையில்லாத வெறுமைக்குள் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தவிப்பதா? அல்லது வெறும் வாக்காளர்களாக இருக்க போகிறார்களா? வடக்கு கிழக்கு இளையோர்களே சிந்தியுங்கள் இல்லாவிட்டால் தேசம் பறிபோனது போல் தமிழ் தேசியமும் முழுமையாக இவர்களால் பறி போய்விடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US