வெளிநாட்டில் கணவன் : தொடருந்தில் பாய முயற்சித்த இளம் தாயை காப்பாற்றிய பொலிஸார்
காலி அஹுங்கல்ல தொடருந்தில் குதிக்க முயற்சித்த 2 பிள்ளைகளின் தாயை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல உப முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது 8 மாத மகளை தூக்கிக்கொண்டு வந்த தாய் இந்த விபரீத முடிவை எடுக்க முயற்சித்துள்ளார்.
அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
தவறான உறவு
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் தவறான உறவை பேணி வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு அனுப்பப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
சுமார் 4 இலட்சத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பண மோசடி
நேற்று மதியம் தன்னிடம் 60000 ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் 8 மாதக் குழந்தையுடன் தொடருந்தில் குதிக்க முயற்சித்ததாக பெண் குறிப்பிட்டுள்ளார்.

முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri