தென்னிலங்கையில் குழந்தை பிரசவித்த இளம் தமிழ் தாய் மரணம்
களுத்துறை, ஹந்தபாங்கொடை பகுதியில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்த நிலையில் அவரது பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளார்.
33 வயதான செல்வராஜன் நிஷாந்தி என்ற பெண், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது நான்காவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
பிரசவத்தின் பின்னர் வீடு திரும்பிய அவர், ஐந்து நாட்களில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின்போது, மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் பாகங்கள் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மரண விசாரணையின் போது உயிரிழந்த பெண்ணின் தற்போதைய கணவர் ஆறுமுகம் தர்மதாஸ் குமார் சாட்சியமளித்துள்ளார்.
“கடந்த ஓராண்டாக நாங்கள் இணைந்து வாழ்ந்து வருகிறோம். மனைவியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மூன்று பிள்ளைகளையும் நானே பொறுப்பேற்று பராமரித்து வந்தேன்.
ஏப்ரல் முதலாம் திகதி அவர் பெண் குழந்தையை பிரசவித்தார். பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்துவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
சட்டபூர்வ தந்தை
தாயின் மறைவைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க அவர்களின் சட்டபூர்வ தந்தை மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த மூன்று பிள்ளைகளும் பரிதாப நிலைமைக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணை ஹொரண பிரதம நீதவான் லக்மினி விதானகமகே முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை நன்னடத்தை திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam