காலில் முள் குத்தி இளைஞன் உயிரிழப்பு: யாழில் சம்பவம்
யாழ். அராலி மேற்கு- வட்டுக்கோட்டையில் காலில் முள் குத்தி நபரொருவர் பலியாகியுள்ளார்.
தருமராசா மதிகரன் எனும் 28 வயதுடைய நபரே நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
பரிதாபமாக உயிரிழப்பு
இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் குத்தியுள்ளது. இருப்பினும் காலில் குத்தப்பட்ட முள்ளினை காணாத நிலையில், முள் தைத்த இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த 2022.06.09 அன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்யப்படவிருந்த டின் மீன்கள் மீட்பு |